இந்தியாவில் ஊழலால் இதுவரை ரூ.23 லட்சம் கோடி இழப்பு: ஆய்வு தகவல்

18/11/2010 14:47

இந்தியா சுதந்திர அடைந்த பின்னர், 1948ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டு வரை ஊழல், வரி ஏய்ப்பு, லஞ்சம் உள்ளிட்ட செயல்களால் ரூ.23 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல குளோபல் பைனான்ஸ் இன்டெகெரிட்டி என்று அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் இதனை தெரிவித்துள்ளது.
 

 


இந்தத் தொகை, இந்தியாவின் தற்போதைய வெளிநாட்டு கடனைப் (ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் கோடி) போல இரண்டு மடங்கு ஆகும்.


மேலும், இந்தியாவின் மொத்த கருப்பு பணத்தில் சுமார் 72 சதவீத கருப்பு பணம், வெளிநாட்டு வங்கிகளில் ரகசியமாக போடப்பட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்தத் தொகை, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

nakkheeran.in