கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்துவருகிறது. வீடுகள் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. காயிதே மில்லத் நகர் உள்ளிட்ட ஊரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருமளவு தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் மக்களின் தினசரி வேலைகளைக்கூட செய்யமுடியாமல் அவதிப்படுகின்றனர்.
மேலும் பலர் தம் சொந்த வீட்டை விட்டு விட்டு உரவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். பெரும்பாலான வீடுகளில் கழிவரை தொட்டிகள் நிறைந்துவிட்டதால் பெரும் சிரமத்தை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
காயிதேமில்லத் நகர் பகுதி மழைநீர் தேக்கம்
பள்ளி விழையாட்டு மைதானங்கள்
முஸ்லிம் முன்னேற்ற சங்கம்
பள்ளிவாசல் ஊரணி
புகைப்படம் தம்பி ஹிஷாம்