தினம் தோறும் திருக்குர்ஆனை படிக்கிறார் டோனி பிளேர்

15/06/2011 18:03

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் தூதராக  செயல்பட்டு வருகிறார். கிறிஸ்தவரான டோனி பிளேர் எந்த மதத்தின் மீதும் பற்று இல்லாமல் இருந்தார். தற்போது அவர் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரானை தினந்தோறும் படித்து வருகிறார்.  இதுகுறித்து டோனி பிளேர் கூறியதாவது: குரானை படிப்பதால் நம்பிக்கையுள்ளவனாக இருக்கிறேன். சர்வதேச அளவில் செயல்பட நம்பிக்கையுடையவனாக இருக்க வேண்டும். அதற்காக தினந்தோறும் குரான் படிக்கிறேன். உலக நடப்புகளை புரிந்து கொள்ளவும், குரான் போதனைகள் உதவுகிறது. இது ஒரு சீர்திருத்த புத்தகம். இதில் எல்லா விஷயங்களும் உள்ளன. அறிவியலை போற்றி, மூட நம்பிக்கைகளை நீக்கச் செய்கிறது இவ்வாறு டோனி பிளேர் கூறியுள்ளார். என்று தினகரன் இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சில மாதங்களுக்கு முன் இவரது மைத்துனி இஸ்லாத்தை தழுவினார். பின் டோனி பிளேர் எழுதிய புத்தகத்தில் தான் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்புவரை இருந்த வெளியுறவுக் கொள்கையை அத்தாக்குதலுக்குப் பின் மாற்றிக் கொண்டாதாகவும், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கடுமையாக விமர்சித்தும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.