வருகிறது இராட்சத வான் கப்பல் - மனித குலத்திற்கு மற்றுமொரு நன்மை

07/10/2010 14:35

திடீரென ஒரு கிராமத்தில் வெள்ளப்பெருக்கு, அல்லது மண்சரிவு ஏற்படின் உடனடியாக அங்கிருந்து கிராம மக்களை அப்புறப்படுத்த எப்படி முயற்சிப்பார்கள். சில ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்கள், மூலம் முழுக்கிராம மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் அவை பலதடவை பயணிக்கவேண்டி வரும். சில சமயம் தரையிறங்க கூட வசதியிருக்காது.

இந்த சிக்கல்களை கருத்தில் கொண்டு அஸ்திரேலியாவின் ஸ்கை லிப்டிங் வர்த்தக நிறுவனம் ஒன்று புதிய வான்கப்பல் ஒன்றை உருவாக்கத் தொடங்கியுள்ளது. சுமார் 150 feet அகலம் (காற்பந்து மைதானத்தின் அளவு) கொண்ட ஒரு இராட்சத பலூன் தான் இந்த வான் கப்பல். ஸ்கை லிப்டர் என பெயரிடப்பட்டுள்ளது. 150 டொன் நிறையை, 1,200 மைல்களுக்கு தூக்கி கொண்டு செல்லும் திறன் படைத்ததாக உருவாக்கப்படுகிறது.

எந்தவசதியுமே இல்லாத ஒரு கிராமத்தில் திடீரென ஏற்படும் இயற்கனை அழிவிலிருந்து அம்மக்களை அப்படியே தூக்கி கொண்டு போய் இன்னுமொரு நகர்ப்புற மருத்துவமனையிலோ, பாதுகாப்பான இடத்திலோ  கொண்டு சேர்க்கும் வசதி இதனால் ஏற்படுகிறது.

வட்டவடிவ டிஸ்க்கை போன்று உருவாக்கப்படும் இப்பலூன்களை இலகுவாக ஓட்டிச்செல்வதற்கு ஏற்ப கியரிங் பொருத்தப்படவுள்ளது. எந்தவகையான காற்றழுத்தத்திற்கும் ஈடுகொடுத்து பறக்கும் வகையில் வடிவமைக்கபப்டவுள்ளது.

 

ஒரு கார்கோ ஹெலிகொப்டர் 700 தடவை பயணித்து கொண்டு செல்லும் பொருட்களை, ஒரே தடவையில் இந்த ஸ்கை லிப்ட்டரினால் கொண்டு செல்ல முடியும். சிறிய வடிவில் சாம்பிள் வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் மூன்று வருடத்தில் இராட்சத ஸ்கை லிப்டர் சந்தைக்கு வந்துவிடும் என்கிறார்கள் இதன் தொழில்நுட்பவியலாளர்கள். இயந்திர தொழில்நுட்ப வளர்ச்சியினால் மனித குலம் சந்திக்கவிருக்கும் மற்றுமொரு பாரிய நன்மையாக ஸ்கைலிப்ட்டர் இருக்கும் என நம்பப்படுகிறது.

ww5.4tamilmedia.com


Create a free website Webnode